உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு இன்று அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் தூய்மைநடைப்பயணம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் தலைமைவகித்தார்.தலைமையாசிரியர் திரு. ம.ராம் சந்தர் வரவேற்புரையாற்றி, மாணவர்களிடையே திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தக்க வைத்தல் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து எடுத்துரைத்தார் . ஆசிரியை திருமதி.செ .ஜேஸ் மாலா அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி கூறினர் . நிகழ்வில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அரிகேசவநல்லூர் ஊராட்சி செயலர் திரு.புதியவன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பின்பு ஊராட்சி பகுதியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக