பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 10 ஆகஸ்ட், 2022

நூற்றாண்டு விழா விளையாட்டுப்போட்டிகள்

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் முதல்  நிகழ்வாக விளையாட்டு விழா இன்று நடைபெற்றது . நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வினை பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் .விளையாட்டுப்போட்டியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியைகளுக்கும் மாணவிகளுக்கும் இடையில் நடந்த கபடிப்போட்டி அனைவரையும் கவர்ந்தது .விளையாட்டுப்போட்டிகள் மிகச்சிறப்பாக அமைய ஒத்துழைப்பு தந்து விளையாட்டுப்போட்டியை நடத்திய எம் பள்ளியின் டேக்வாண்டே,சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் திரு.பாரதி ராஜா அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.விழாவிற்கான ஏற்பாடுகளை  தலைமையாசிரியர் ராம் சந்தர் அவர்களும் ஆசிரியர்களும் செய்திருந்தனர்.