அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவிண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் " மார்ச் 22 செவ்வாய் மாலை 5.00க்கு நடைபெற்றது .மிகச்சிறந்த பேராளுமைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நம் பள்ளியும் பங்கு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்யும் இந்த நிகழ்வில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கு கொண்டு பரிசு பெற காத்திருக்கிறார்கள் .. வாய்ப்பளித்த சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர் ரவிசொக்கலிங்கம் அய்யா அவர்களுக்கும் வலைத்தமிழ் பார்த்தசாரதி அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நிகழ்வில் காணொளியை இன்று நம் பள்ளி மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக