பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் ( LO ) பயிற்சி ஒத்திவைப்பு!

 
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி 10.01.2022 முதல் வட்டாரத் தலைமையிடத்தில் தெரிவு உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ( Hi - Tech Lab ) நடைபெற்று வருகிறது . செய்யப்பட்ட இந்நிலையில் , தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இணைய வழியாக வழங்கப்படவுள்ளது.


எனவே , 03.02.2022 முதல் நடைபெற உள்ள கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சியினை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக