இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக சேரன்மகாதேவி கிளையின் சார்பில் LIC STUDENT OF THE YEAR 2021 AWARD வழங்கும் விழா இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திரு. ம.ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார். சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக உதவி கிளை கிளை மேலாளர் திரு.கருப்பசாமி அவர்கள் முன்னிலைவகித்தார்கள். சேரன்மகாதேவி ஆயுள் காப்பீட்டுக்கழக கிளை கிளை மேலாளர் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமைவகித்து மாணவர்களுக்கு விருது வழங்கினார்கள். ஆயுள் காப்பீட்டுக்கழக தலைவர் மன்ற உறுப்பினர்கள் திரு. அய்யப்பன் ,திரு.மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்துச்செல்வி நன்றியுரையாற்றினார்கள் . விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி , திருமதி.ஜேஸ் மாலா , திருமதி.கோமதி , திருமதி.சண்முகத்தில்லை,திருமதி.ஜெயலட்சுமி ,செல்வி.முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
அருமை...
பதிலளிநீக்கு