பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

எங்களால் முடியும்...

தமிழ் நாடு கல்ச்சுரல்$யோகா ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்ட் நடத்திய தென்மாவட்ட அளவிலான யோகா மற்றும் ஓவியப்போட்டியில் நம் அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு ஓவியப்போட்டியில் முதல்பரிசு5,இரண்டாம் பரிசு 3, மூன்றாம் பரிசு 2,யோகாப்போட்டியில் முதல்பரிசு3,இரண்டாம் பரிசு 3, மூன்றாம் பரிசு 7 மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிக்கு மாணவர்களைத் தயார்செய்த யோகா மாஸ்டர் திரு.ராஜேஷ் மற்றும் ஓவிய ஆசிரியர் திரு. துரை இசக்கிமுத்து அவர்களுக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்..போட்டியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப்பள்ளிகளுக்கு மத்தியில்
கலந்து கொண்ட ஒரே அரசு உதவிபெறும் பள்ளி நம் பள்ளி என்பதில் பெருமிதம் அடைகிறோம்.. எங்களால் முடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக