பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பள்ளி பரிமாற்றுத்திட்டம்- அறிவியல் கண்காட்சி

அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்   பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின்  நிறைவு நாளில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் உயர்திரு. ஜெயராஜ் அவர்கள்  திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்கள்.  பள்ளி பரிமாற்றுத்திட்டத்தில் பங்குபெற்ற AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடி பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தில் கலந்து கொண்ட அனுபவங்களை  கேட்டறிந்தார்கள் . இரு பள்ளி மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்து பாராட்டினார் . அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்ற படைப்புகளில் சிறந்த இரு படைப்புகளை அளித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  கண்காட்சியினை  பிற பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் கண்டு களித்தனர். பின்  கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  நிறைவு விழாவினை  AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  உதவி தலைமையாசிரியர் திரு. பாலகிரு ஷ்ணன்  திட்ட பொறுப்பாசிரியர்கள்  திருமதி. சங்கரி , திருமதி.சங்கீதா , திரு. ஹரிகிருஷ்ணன்    ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள்  திருமதி.முத்துச்செல்வி , திருமதி. ஜேஸ் மாலா   ஆகியோர் கலந்து  கொண்டனர் .














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக