பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 9 ஏப்ரல், 2015

நன்றி

நம் பள்ளி ஆண்டு விழா முழுவதையும் தன கேமரா கண்ணினால் படம் பிடித்த அன்பு நண்பர் வீரவநல்லூர் எஸ்.வி. ராஜா ஸ் டூ டி யோ  வரதராஜன் அவர்களுக்கும், பரிசுப்பொருட்களை மிக குறைந்த நியாயமான விலையில் வழங்கிய  கல்லிடைகுறிச்சி சென்னை ஸ்டேஷனரீஸ்  நிருவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி.

நன்றி

நம் பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில்  அனைத்து மாணவர்களையும் வீரவநல்லூர் பொது நூலகத்தில் உறுப்பினராக சேர்த்திடும் வகையில் அனைத்து  மாண வர்களுக்கும் உறுப்பினர் சந்தாத்தொகையினை செலுத்திய எம் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி அவர்களின் கணவர் திரு. பால முரளி  அவர்களுக்கு நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் 

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆண்டு விழா காட்சிகள்

ஆண்டு விழா காட்சிகள்

எம் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்ற மாணவி முப்பிடாதி கார்த்திகா விற்கு  பள்ளி செயலர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  பரிசு வழங்கி பாராட்டுகிறார்கள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

பள்ளி ஆண்டு விழா 2015

பள்ளி ஆண்டு விழா 2015

 நமது பள்ளியின் ஆண்டு விழா  06.04.2015 மாலை 5 மணி அளவில் பள்ளி வளாகத்தில்  வைத்து நடைபெற உள்ளது. கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ,பெரியோர்கள் , பெற்றோர்கள், நண்பர்கள் , மாணவ செல்வங்கள்  அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் .