பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 4 பிப்ரவரி, 2015

நமது பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புரணர்வு பேரணி நடைபெற்றது.  கூட்டத்திற்கு  பாப்பாக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அக்பர் அலி தலைமைவகித்தார். அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி முன்னிளைவகித்தார். தலைமை ஆசிரியர் திரு. ம. ராம்சந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவ மாணவிகளுடன்  டெங்கு குறித்து சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு கருத்துக்களை கலந்துரையாடினார்கள். ஆசிரியை திருமதி. அமுதவல்லி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை  ஆசிரியைகள் ஜெஸ் மாலா ,முத்து செல்வி,மணிமேகலை ,இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் பேரணி நடைபெற்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக