பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

நினைவுகள் ......




எம் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தந்து பள்ளியின் செயல்பாடு குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு . எ. சுடலைமணி அவர்களுடன் சேரன்மகாதேவி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வில்சன் சத்யராஜ் , பள்ளி செயலர் திரு.டிவி. சுப்பிரமணியன் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் திரு . பாலமுருகன் ,மூத்த ஆசிரியர் திரு. இரா.மணி ,தலைமை ஆசிரியர் ராம்சந்தர் ஆகியோர் கலந்துரையாடினார்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அஞ்சலி .....



எங்கள் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. மு.அபூபக்கர் அவர்கள் மறைந்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அவர்களை பற்றி சில வார்த்தைகள் ... அன்னாரின் அமைதியான புன்சிரிப்பு இன்னும் எங்கள் நினைவுகளை விட்டு அகலவே இல்லை. ஏதேனும் ஒரு தருணம் அன்னாரை நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது. அவரின் கையெழுத்துக்கு நிகர் அவரே ஆவார். அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல எங்கள் பள்ளிக்கும் பேரிழப்புதான். அன்னாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம் .