அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 102வது ஆண்டு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு டி.வி .சுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்கள். பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு. ஆ .ஜோசப் கிரகோரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி மற்றும் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனர் மகேஸ்வரன் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் திரு .ராம் சந்தர் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள்.முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி மற்றும் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனர் மகேஸ்வரன் ஆகியோர் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இடைநிலையாசிரியர் திருமதி.ஜேஸ் லா நன்றிகூறினார். நிகழ்ச்சியினை ஆசிரியைகள் . திருமதி .ஜெயலட்சுமி மற்றும் திருமதி .சண்முகத்தில்லை ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி, திருமதி .கோமதி திருமதி. அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்,