பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

அறிவியல் கொண்டாட்டம்











தொடக்கக் கல்வி துறையின் அறிவியல் கொண்டாட்டம் முகாம் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது . நிகழ்ச்சியினை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி. பி. மேரி சொருப ராணி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் திரு. இசக்கியப்பன் திருமதி. வல்சாலா மற்றும் திருமதி. புனிதவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைகளை செய்து காட்டினர் . மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். மாணவர்கள் கேட்ட கேள்விகளில் சில அணு உலயினால் என்ன நன்மை? அதற்க்கு ஏன் இவ்வளவு நாள் கழித்து எதிர்ப்பு? பயம் என்றால் என்ன? ரத்தத்தைஎப்படி வகையாக பிரிக்கிறார்கள்? முடிக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் ? இது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்குரிய பதில்களை தெரிந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் ராமலக்ஷ்மி , மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதன், 5 அக்டோபர், 2011

சரஸ்வதி பூஜை



இன்று காலை எமது பள்ளியில் சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

பரிசு வழங்குதல்



இன்று காலை வீரவநல்லூர் ஹைட்ஸ் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. திரு.காமராஜ் அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் ம. ராம்சந்தர் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.