அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 101 வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு அம்பாசமுத்திரம் வனச்சரகர் திரு குணசீலன் அவர்கள் தலைமை வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். ஆசிரியை திருமதி ஜேஸ் மாலாஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். தலைமை ஆசிரியர் திரு . ராம்சந்தர் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள். பள்ளி செயலர் திரு டி வி சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் டேக்வாண்டோ பயிற்சியாளர் திரு பாரதிராஜா அவர்களின் பயிற்சியில் டேக்வாண்டோ மற்றும் சிலம்பம் ஆகியவற்றை பயிற்சி செய்து காண்பித்தார்கள். ஆசிரியை திருமதி. முருகத்தாய் அவர்கள் நன்றியை கூறினார். ஆசிரியை திருமதி முத்துச்செல்வி அவர்கள் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி அமுதவல்லி திருமதி கோமதி திருமதி அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தார்கள். விழாவில் வனவர் திரு கண்ணன், திரு அய்யப்பன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக