ஸ்ரீ சாய் கட்டிட பால் காய்ச்சுதல் நிகழ்ச்சி
அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டிடமான ஸ்ரீ சாய் கட்டிடத்தின் பால் காய்ச்சுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது .காலையில் கணபதிஹோமம் லட்சுமி பூஜை கோ பூஜை நடைபெற்றது. பூஜைகளை அரிகேசவநல்லூர் அரியநாத சுவாமி கோவில் அர்ச்சகரும் நம் பள்ளியின் புரவலருமான திரு.சரவணன் பட்டர் அவர்கள் நடத்தினார்கள் .நிகழ்ச்சியில் நம் பள்ளியின் செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் ,பாப்பாக்குடி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.ஜோசப் கிரகோரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடசுப்பிரமணியன்,திருமதி.ஜூலி வேங்கடசுப்பிரமணியன்,திரு.இரா.மணி ,திரு.S .S .ரெங்கன் ,திரு. சந்தோஷ் ஐயப்பன், திரு.ஐயப்பன்,அம்பை சபரி திரு.சட்டநாதன்,திரு.மனோகரன் திரு.மாரிமுத்துபாண்டியன்,திரு.பாலமுரளி,திரு.மனோகரன் ,திரு.துரைராஜ் ,திரு.வெங்கடேஸ்வரன் ,பாப்பாக்குடி இந்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.முத்தையா ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்