திருநெல்வேலி க்ரீன் சிட்டி மற்றும் டீம் ட்ரஸ்ட் இணைந்து விருது 2022 விழா 10.11.2022 சனிக்கிழமை திருநெல்வேலி விஜயா கார்ட்டனில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு லயன்.பொன் .திருமலைமுருகன் அவர்கள் தலைமைதாங்கி விழாவினை சிறப்பாக நடத்தினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உயர்திரு. திருப்பதி அவர்கள் சிறப்பு விருந்தினாராகக் கலந்துகொண்டு அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்கள். இதில் சிறந்த பள்ளிக்கான விருதினை அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. ம.ராம்சந்தர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொண்டார். மேலும் சிறந்த கல்வி சிந்தனையாளர் விருதினை அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி இடைநிலையாசிரியர் திருமதி.செ .ஜேஸ் மாலா அவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கினார்.225க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தூய சவேரியார் கல்லூரி முதல்வர் , நெல்லை அரசு ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.விழாவினை மிக சிறப்பாக லயன்.பொன் .திருமலைமுருகன் அவர்களை அனைவரும் பாராட்டினர்