பாப்பாக்குடி சரக தலைமையாசிரியர்கள் கூட்டம் இன்று பாப்பாக்குடி வட்டார வள மையத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . முனைவர் பட்டம் பெற்றமைக்கு சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்ளை பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சு. கல்யாணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள். வட்டார வள மையம் சார்பாக மாவட்ட கல்வி அலுவலர் நல்லாசிரியர் முனைவர் .மூ . சுடலை அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள், பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், சுகாதார நடவடிக்கைகள், ஆசிரியர்களின் கடமைகள் ஆகியன குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களும் எடுத்துரைத்தார்கள்