அம்பாசமுத்திரம் AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின் நிறைவு நாளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் உயர்திரு. ஜெயராஜ் அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்கள். பள்ளி பரிமாற்றுத்திட்டத்தில் பங்குபெற்ற AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடி பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தில் கலந்து கொண்ட அனுபவங்களை கேட்டறிந்தார்கள் . இரு பள்ளி மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்து பாராட்டினார் . அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்ற படைப்புகளில் சிறந்த இரு படைப்புகளை அளித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கண்காட்சியினை பிற பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் கண்டு களித்தனர். பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு விழாவினை AVRMV அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் திரு. பாலகிரு ஷ்ணன் திட்ட பொறுப்பாசிரியர்கள் திருமதி. சங்கரி , திருமதி.சங்கீதா , திரு. ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் திருமதி.முத்துச்செல்வி , திருமதி. ஜேஸ் மாலா ஆகியோர் கலந்து கொண்டனர் .