நமது பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புரணர்வு பேரணி நடைபெற்றது. கூட்டத்திற்கு பாப்பாக்குடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. அக்பர் அலி தலைமைவகித்தார். அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி முன்னிளைவகித்தார். தலைமை ஆசிரியர் திரு. ம. ராம்சந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவ மாணவிகளுடன் டெங்கு குறித்து சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு கருத்துக்களை கலந்துரையாடினார்கள். ஆசிரியை திருமதி. அமுதவல்லி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை ஆசிரியைகள் ஜெஸ் மாலா ,முத்து செல்வி,மணிமேகலை ,இன்பரசி ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் பேரணி நடைபெற்றது.