பிரமிக்க வைத்த பொருநை புத்தகத்திருவிழா
இன்று அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் ,செயலர் மற்றும் ஆசிரியர்களுடன் இன்று நெல்லை பொருநை புத்தகத்திருவிழாவிற்கு தமிழ் நாடு அரசுப்பேருந்தில் சென்றோம்.. மாணவர்களை அழைத்து சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து விடுவதற்கு மிகக்குறைந்த பணமே பெற்றனர். அனைத்து துறையினரின் கண்காட்சியும் மாணவர்களை மகிழ்வித்தது. நம் பள்ளி மாணவர்கள் இத்தனை பெரிய புத்தகக்கடைகளையும் புத்தகங்களையும் பார்ப்பது இதுவே முதன்முறை... மாணவர்கள் அனைவரும் அவர்களுக்குப்பிடித்த புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர். தொல்லியல் துறை கண்காட்சி, பள்ளிக்கல்வித்துறை கண்காட்சி, இல்லம் தேடிக்கல்வி கண்காட்சி மாணவர்களின் மனம் கவர்ந்தது. நற்றிணை பதிப்பகத்தார் ரூபாய் 100 விலையில் புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பினை (688 பக்கங்கள்)வெளியிட்டிருக்கிறார்கள் . இன்னும் இரண்டு தினங்களே உள்ளது. அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள்.. மிகச்சிறப்பாக நடத்திவரும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ...
மாணாக்கர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்று கனிவன்புடன் நடந்து கொண்ட தமிழ் நாடு அரசுப்போக்குவரத்துக்கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.. பேரூந்தினை மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கிய தமிழ் நாடு அரசுப்போக்குவரத்துக்கழக திரு நெல்வேலி மேலாளருக்கும் சேரன்மகாதேவி கிளை மேலாளருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்