1955ம் ஆண்டில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் படித்த மாணவரும் முன்னாள் பி எஸ் என் எல் பொதுமேலாளருமாகிய (நிதி ) திரு. சூரியநாராயணன் அவர்கள் நம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூபாய் 25000/- மதிப்பிலான மளிகைப்பொருட்களை வழங்கியுள்ளார்கள் . தான் படித்த நம் பள்ளியோடு இன்று வரை தொடர்பில் இருக்கும் அன்னார் ஒவ்வொரு மாணவருக்கும் முன்னுதாரணம் ஆவார்கள் .
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது"
திரு.சூரியநாராயணன் அவர்களுக்கு நம் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
65 ஆண்டுகளுக்கு முன் தான் படித்த பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்த முன்னாள் மாணவர்