நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் இன்று (09.08.2017) காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் திரு.ராம் சந்தர் தலைமைதாங்கினார். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்தும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் சுகாதாரம் குறித்தும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராக அரிகேசவநல்லூர் இருக்க வேண்டும் என்ற தீரமானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பெற்றோரிடம் பள்ளியின் சிறப்புகளான சுகாதாரமான பள்ளிவளாகம், இருக்கை வசதிகள், அழகான தெளிவான தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப்பயிற்சி , ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான வகுப்பறை , மாணவர் மன்ற செயல்பாடுகள் , பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி , கணினி வழி கல்வி , சுகாதாரமான குடிநீர் வசதி முதலான சிறப்புகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. ஆசிரியர் திருமதி.ஜேஸ் மாலா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி. திருமதி. மணிமேகலை , செல்வி. இ ன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.