திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM )
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) இன்று ஆரம்பிக்கப்பட்டது . இதன் மூலம் மாணவர்கள் தங்களின் பாடப்பொருளினை நேரில் பார்த்த உணர்வுடன் பயில்வார்கள் . இன்று மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிநிலையத்தினை மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM )மூலம் கண்டுகளித்தனர் . நேரில் விண்வெளி ஆராய்ச்சிநிலையத்திற்குள் இருந்தால் அதனுள் ஏற்படும்ஒலிகளுடன் உள்ளே நாம் இருக்கும் உணர்வினை ஏற்படுத்தியது. இன்று ஒருவகுப்பறை.......இன்னும் சில நாட்களில் அனைத்து வகுப்பறைகளுக்கும் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM )மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து ஆரம்பிக்கப்படவுள்ளது .திரு .கைலாஷ் ஜீவன், டெர்ஸ்பைட் டெக்னாலஜிஸ் LLP - நிறுவனர் மற்றும் CEO, டெர்ஸ்பைட் டெக்னாலஜிஸ் எல்எல்பி இணை நிறுவனர் திரு முகமது ஹனிஃபா ரஷிக் மற்றும் திரு. அர்ஜுன்,திரு.சூர்யா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்