நெல்லை மாவட்டம் அரிகேசவ நல்லூர் கிராமத்திற்கு மட்டுமே தெரிந்திருந்த இந்து நடு நிலைப்பள்ளியின் பெயரானது இன்று மாவட்டம் தாண்டியும் புகழ்பெற்றிருப்பதற்கு முக்கிய காரணகர்த்தா எம் பள்ளியின் செயலர் திரு. டி.வி. சுப்பிரமணியன் அவர்கள்... செயலரைப்போல் அல்லாமல் ஒரு தந்தையைப்போல் எங்களுடன் பழகுபவர்... எங்கள் பள்ளியின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் பங்கு கொண்டு வளர்ச்சியைக்கண்டு ஒரு தாயைப்போல அகம் மகிழ்பவர் எங்களின் செயலர்... தந்தையின் மீது எந்த அளவு அன்பும் கவனிப்பும் அரவணைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்று எங்களுக்கு உணர்த்தியவர் எங்கள் பள்ளி செயலரின் புதல்வரும் எங்களின் சகோதரருமான திரு. சு,. வெங்கட சுப்பிரமணியன் அவர்கள்....கடினமான உழைப்பாளி... தந்தைக்கும் மகனுக்கும் இன்று பிறந்த நாள்....இருவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள்,