திங்கள், 5 ஆகஸ்ட், 2019
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி
அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நடத்திய
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று (05.08.2019 ) காலை 10 மணிக்கு அரிகேசவ நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து
நடைபெற்றது.தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார் . விழாவிற்கு கிரியம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் திரு. சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். அரிகேசவநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் திருமதி . பத்திரகாளி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியில் மாணவர்கள் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி யோகா பயிற்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தினார்கள். மாணவர்கள்தாங்கள் வரைந்த நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு தொடர்பான ஓவியங்களை பொதுமக்களிடம் காண்பித்து விளக்கமளித்தார்கள் . பின்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருமதி. முத்து செல்வி அவர்கள் நன்றிகூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி.அமுதவல்லி ,திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. அபிராமி, திருமதி. கோமதி, செல்வி.துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று (05.08.2019 ) காலை 10 மணிக்கு அரிகேசவ நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து
நடைபெற்றது.தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார் . விழாவிற்கு கிரியம்மாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் திரு. சுடலை அவர்கள் தலைமைதாங்கினார்கள். அரிகேசவநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் திருமதி . பத்திரகாளி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியில் மாணவர்கள் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி யோகா பயிற்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தினார்கள். மாணவர்கள்தாங்கள் வரைந்த நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு தொடர்பான ஓவியங்களை பொதுமக்களிடம் காண்பித்து விளக்கமளித்தார்கள் . பின்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருமதி. முத்து செல்வி அவர்கள் நன்றிகூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி.அமுதவல்லி ,திருமதி.ஜேஸ் மாலா , திருமதி. அபிராமி, திருமதி. கோமதி, செல்வி.துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)