அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் 2021-22ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களிடம் காணொளிக்காட்சி மூலம் சர்விஸ் டு சொசைட்டி ரவி சொக்கலிங்கம் அவர்கள் தன்னம்பிக்கை உரையாற்றினார்கள் . தானும் அரசுப்பள்ளியில் பயின்று உயர்த்த இடத்தினை அடைந்த தன் வாழ்க்கையனுபவத்தினை மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு மிகவும் அழகாக மாணவர்களுக்குப்புரியும் வண்ணம் பதிலளித்தார்கள் .
சனி, 14 மே, 2022
2021-22 எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா
2021-22ம் கல்வியாண்டில் பயின்ற எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா 13.05.2022 அன்று அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் ஹரிநாராயணன் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. விழாவில் பள்ளி செயலர் திரு. டி .வி. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் . நினைவுப்பரிசினை பொறியாளரும் சர்வீஸ் டு சொசைட்டி நிறுவனருமான ரவிசொக்கலிங்கம் அவர்களும் பள்ளிநிர்வாகமும் இணைந்து மாணவர்களுக்கு வழங்கினார்கள் . விழாவில் தலைமையாசிரியர் ராம் சந்தர் ,ஆசிரியர்கள் திருமதி. முத்துச்செல்வி, திருமதி. அமுதவல்லி,திருமதி.ஜேஸ் மாலா ,திருமதி.முருகதாய்,திருமதி.கோமதி,திருமதி.ஜெயலட்சுமி,திருமதி.சண்முகத்தில்லை ,திருமதி.மணிமேகலை ,திருமதி.ப்ரேம்கலா ,செல்வி.முத்துலெட்சுமி , டேக் வாண்டே மற்றும் வில்வித்தைப் பயிற்சியாளர் திரு.பாரதிராஜா ஆகியோர் வாழ்த்திப்பேசினர் .எட்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். விழாவில் தினம் ஒரு திருக்குறளினைத் தினமும் வழங்கும் ஆசிரியர் செல்வி. முத்துலெட்சுமிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.