2020-21 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம் இன்று நம் இந்துநடு நிலைப்பள்ளியின் ஹரி நாராயணன் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமைவகித்தார் . தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது. பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மாற்றும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் எடுத்துரைத்தார். கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு அளிக்கப்பட்டது . பட்டதாரி ஆசிரியை திருமதி. சு.முத்துசெல்வி நன்றி உரையாற்றினார் . கூட்டம் முடிந்த பின் பெற்றோர்கள் அனைவரும் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று வசதிகளைப் பார்வையிட்டனர் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் திருமதி.அமுதவல்லி,திருமதி.ஜேஸ்மாலா,திருமதி.கோமதி,செல்வி.துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.