எம் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தந்து பள்ளியின் செயல்பாடு குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு . எ. சுடலைமணி அவர்களுடன் சேரன்மகாதேவி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. வில்சன் சத்யராஜ் , பள்ளி செயலர் திரு.டிவி. சுப்பிரமணியன் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் திரு . பாலமுருகன் ,மூத்த ஆசிரியர் திரு. இரா.மணி ,தலைமை ஆசிரியர் ராம்சந்தர் ஆகியோர் கலந்துரையாடினார்
ஞாயிறு, 4 டிசம்பர், 2011
வெள்ளி, 2 டிசம்பர், 2011
அஞ்சலி .....
எங்கள் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. மு.அபூபக்கர் அவர்கள் மறைந்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அவர்களை பற்றி சில வார்த்தைகள் ... அன்னாரின் அமைதியான புன்சிரிப்பு இன்னும் எங்கள் நினைவுகளை விட்டு அகலவே இல்லை. ஏதேனும் ஒரு தருணம் அன்னாரை நினைவு படுத்தி கொண்டே இருக்கிறது. அவரின் கையெழுத்துக்கு நிகர் அவரே ஆவார். அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல எங்கள் பள்ளிக்கும் பேரிழப்புதான். அன்னாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)