வனத்துறையின் மத்திய நாற்றங்கால் தட்டப்பாறை பண்ணைக்குமாணவர்களின் களப்பயணம்
அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் களப்பயணமாக இன்று வீரவநல்லூர் புறவழிச்சாலையில் வெள்ளங்குளி அருகில் அமைந்துள்ள தமிழக வனத்துறையின் மத்திய நாற்றங்கால் தட்டப்பாறை பண்ணைக்கு சென்றனர். மாணவர்களை வனச்சரகர் திரு. குணசீலன் அவர்களின் தலைமையிலான அலுவலர்கள் வரவேற்றனர். வனச்சரகர் திரு. குணசீலன் அவர்கள் மாணவர்களிடம் மரங்கள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார் . மேலும் மாணவர்களுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து மரங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் , எவ்வாறு மரச்செடிகளை வளர்ப்பது குறித்தும் எடுத்துக்கூறினார். மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் கேட்டு வந்தனர். மேலும் தங்களின் சந்தேகங்களைக்கேட்டு தெளிவுபெற்றனர் .கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தேனீர் மற்றும் இனிப்புகளை வனத்துறையினர் வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக