புதிய கட்டிடடப்பணி மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கிராமத்துப் பள்ளி அனைத்து நவீன வசதிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதன் பின்புலத்தில் உள்ள நல் உள்ளம் படைத்த பெரியோர்களின் உதவிதான் காரணம் . புதிய கட்டிடத்திற்கு ஆகும் செலவு ரூபாய் 10 லட்சம் . முதலில் நான் தருகிறேன் என்று ரூபாய் 50000/- அளித்த எங்கள் அன்பு சகோதரர் திரு.M.H.M. இப்ராஹிம் (அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளை )அவர்கள்,,ரூபாய் 3,50,000/- அளித்த எங்கள் அரிகேசவநல்லூர் மண்ணின் மைந்தர் திரு. ராமசுப்பிரமணியன்,திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்கள் , ரூபாய் 1,00,000/- அளித்த எம் பள்ளி செயலர் திரு. டி .வி .சுப்பிரமணியன் அவர்கள் ,ரூபாய் 20,000/- அளித்த எங்கள் பள்ளி ஆசிரியர் திரு.ரெங்கன் அவர்கள், ரூபாய் 35000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி . அமுதவல்லி அவர்கள் ,ரூபாய் 10000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி . அமுதவல்லி அவர்களின் கணவர் திரு. குப்புசாமி அவர்கள் , ரூபாய் 25000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி அவர்கள்,ரூபாய் 20000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி .ஜேஸ் மாலா அவர்கள் ,ரூபாய் 20000/- அளித்த செல்வி. தீபா அவர்கள், ரூபாய் 5000/- அளித்த திரு. ராஜாமணி அவர்கள் , எம் பள்ளி தலைமையாசிரியர் திரு . ராம் சந்தர் ரூபாய் 30000,ரூபாய் 10000/- அளித்த திரு. பாலன் அவர்கள் ....எங்களது கனவினை நனவாக்கிய இவர்களுக்கும் , இன்னும் உதவி செய்பவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது."
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது."