நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்று 13ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். 12 ஆண்டுகளான எனது பணி 12 நிமிடங்கள் கடந்த மாதிரி உள்ளது. இப்பதவியில் என்னை அமர வைத்த எம் பள்ளி செயலர் திரு. தி. வி. சுப்பிரமணியன் சார் மற்றும் எனது தந்தை திரு. இரா. மணி ஆகியோரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். பள்ளியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் என்னுடன் பயணித்து பொருளுதவி செய்து இன்று (பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் புதிய கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆண்டிராய்டு டீ வி க்கள் , சி சி டீ வி கேமராக்கள், கணிப்பொறிகள் , டெஸ்க் பெஞ்சுகள் , விளையாட்டு மைதானம் ...) அனைத்து வசதிகளும் நிறைந்த பள்ளியாக மாற்றிய பெரியோர்களாகிய திரு. கணபதி சுப்பிரமணியன் சார் , திரு. எம். ஹஜ். இப்ராஹிம் சார் , டாக்டர். ராமசுப்பிரமணியன் சார் , திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன் , திரு. சூரியநாராயணன் சார் , திரு. பாலசுப்பிரமணியன் சார் ,
திரு. ராபர்ட் சார் , ஷேச சாயி பேப்பர் மில் நிர்வாகத்தினர், திரு. மனோகரன் சார், திரு. பாலமுரளி சார் , திரு. குப்புசாமி சார் , காஜா பீடி நிறுவனத்தார்,செல்வி தீபா , எனது நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
நம் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு எனது பணி சிறப்பிக்க அமைய எங்களை வழி நடத்திவரும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும், அலுவலகப்பணியாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் .
எனது பணியில் எனக்கு உறுதுணையாக இருந்து வரும் என்னுடன் பணிபுரியும் ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி திருமதி முத்துச்செல்வி , திருமதி.ஜேஸ் மாலா , திருமதி .கோமதி, என் குடும்பத்தினர் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கும் எனது நன்றிகள்..
அனைத்திற்கும் மேலாக என் மாணவச்செல்வங்களுக்கும் .பெற்றோர்களுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ..
இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம்... ஆனால் துளி கூட தயக்கமில்லை.. ஏனென்றால் மேற்கூ றிய அனைவரும் என்னுடன் .......