நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம. ராம் சந்தர் வரவேற்றார்.விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வீரவநல்லூர் அல்பா முஹம்மது ஹுசைன் அறக்கட்டளையின் தலைவரும் நம்பள்ளியின் புரவலருமான திரு. இப்ராஹிம் அவர்களும்,அன்னாரது குடும்பத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திரு. இப்ராஹிம் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் .அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்கள் .
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள்,பரிசுகள் அளித்தார்கள். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள்.மேலும் நம்பள்ளி புதிய விளையாட்டுத்திடல் மற்றும் நிரந்தர விழா மேடை அமைக்க நிதி உதவி வழங்கினார்கள். அன்னாருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியை திருமதி. அமுதவல்லி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள்,பரிசுகள் அளித்தார்கள். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்கள்.மேலும் நம்பள்ளி புதிய விளையாட்டுத்திடல் மற்றும் நிரந்தர விழா மேடை அமைக்க நிதி உதவி வழங்கினார்கள். அன்னாருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியை திருமதி. அமுதவல்லி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.