01.12.2016 இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா,மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு பாப்பாக்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி.. சோபியா மெர்சி ஆக்னஸ் அவர்கள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் திரு. ம. ராம் சந்தர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் திருமதி. ஜேஸ் மாலா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பாசிரியர் திருமதி. காந்திமதி, ஆசிரியை திருமதி. அமுதவல்லி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் . ஐந்தாம் வகுப்பு மாணவி செல்வி. சந்தானம் மரங்கள் வளர்ப்பு குறித்தும், எட்டாம் வகுப்பு மாணவியும் ROTARY INTERACT CLUB தலைவருமான செல்வி. முப்பிடாதி மாற்றுத்திறனாளிகள் குறித்தும் பேசினார். எட்டாம் வகுப்பு மாணவிகள் செல்வி பத்மப்ரியா, செல்வி. இந்து ஆகியோர் பூமியின் நிலை குறித்து பாடல் பாடினார். நம் மாணவிகளின் நாடகம் நடை பெற்றது. ஆசிரியை திருமதி. முத்துசெல்வி நன்றி கூறினார். பின் ROTARY INTERACT CLUB உறுப்பினர்கள், மாணாக்கர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. விழாவின் முடிவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் நம் பள்ளி ஆசிரியைகள் திருமதி. மணிமேகலை, செல்வி. இ ன்பரசி, சிறப்பாசிரியர்கள் திரு. ராயப்பராஜ், திரு. முருகேசன், திருமதி. கிருஷ்ணவேணி, திருமதி. தினகர பேபி ஆகியோர் கலந்துகொண்டனர்.